இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமையலுக்கு கேஸ் சிலிண்டர்கள் தான் உபயோகிக்கப்படுகின்றன. மண்ணெண்ணெய் அடுப்பு, விறகு அடுப்புகள் எல்லாம் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் மட்டும் தான் அதிகம் பயன்பாட்டில் காணப்படுகிறது.
ஒவ்வொரு வீட்டிலும் சமையல் எரிவாயு இல்லாத வீடே இல்லை. ஒரு பக்கம் கேஸ் சிலிண்டரின் எரிவாயு விலை அதிகரித்துக்கொண்டே செல்ல மறுபக்கம் அதை கையாளும் முறையும் பாதுகாப்பும் அவசியமானதாகும்.
கேஸ் சிலிண்டரை எப்படி உபயோகிப்பது என்பது பற்றி ஒவ்வொரு குடும்பத்தினரும் அறிந்திருக்க வேண்டும். விலை மதிப்பற்ற மனித உயிர் இழப்பை தவிர்க்க பாதுகாப்பான முறையில் சமையல் அறையை பெண்கள் கையாள வேண்டும்.
கடந்த நாளில், சேலம் கருங்கல்பட்டியில் கேஸ் சிலிண்டர் வெடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், கேஸ் சிலிண்டரை எப்படி பாதுகாப்பாக கையாள்வது என்பதை பற்றி பார்ப்போம்.